ரமாலஷ்மி - தமிழ் நாவல் எழுத்தாளர்

INTRODUCTION

ABOUT ME

வணக்கம் தோழமைகளே!
என் பெயர் ரமாலஷ்மி. தமிழ் நாவலாசிரியர். இதுவரை பதினொரு நாவல்கள் எழுதியுள்ளேன். அவற்றில் ஏழு புத்தகமாக வெளிவந்துள்ளது.

WORKS

BOOKS

img

Reader 1

Entrepreneur

karuvarai sontham story made me shed tears. one of my favourite novel.expecting lot more from you.

img

Reader 2

House wife

samvritha novel the best horror story ive ever read. very good writing.

img

Reader 3

techie

very good writing with twists here and there. All your novels were awesome.

Blog

Latest Blog Posts

உன்னாலே உயிர் வாழ்கிறேன் - புத்தக வெளியீடு

 

வணக்கம் தோழமைகளே!
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில், ரமா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக, ஆன்லைனில் நான் எழுதிய 'மீண்டும் பூத்தது காதல்' என்ற நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அருண் பதிப்பகம் - 9003145749
பிரியா நிலையம் - 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321

அன்புடன்,
ரமாலஷ்மி.

கதைச் சுருக்கம்:
பகையின் காரணமாக தத்தம் வாழ்க்கைத் துணையை இழக்கும் தேவாவும், மஹதியும், டெல்லிக்கு தப்பி ஓடி வருகிறார்கள். அங்கே இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட்டு நட்பு மலர்கிறது. இதற்கிடையில் மஹதியை பின் தொடர்கிறான் ஓர் மர்ம மனிதன். அவனால் இவள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இக்கொலை முயற்சியில் இருந்து மஹதி உயிர் தப்பினாளா? யார் அந்த மர்ம மனிதன்? தேவா, மஹதி வாழ்வில் என்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்புடன் சொல்லும் நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்'.


உன் கரம் பற்றி புத்தக வெளியீடு

 

வணக்கம் தோழமைகளே!
வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். கடந்த சில மாதங்களாகவே முயன்று இப்பொழுதுதான் இதற்கான நேரம் அமைந்துள்ளது. விஷயம் என்னவென்றால்,
கடவுள் அருளால், ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பதிப்பகத்தை தொடங்கியுள்ளேன். இனி எனது நாவல்கள் ‘ரமா பதிப்பகம்’ மூலம் புத்தகங்களாக வெளியிடப்படும்.
முதல் வெளியீடாக, கீர்த்தனா – மாதவன் நாயகன் நாயகியாக உங்களை கவர்ந்த ‘உன் கரம் பற்றி’ நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அருண் பதிப்பகம் – 9003145749
பிரியா நிலையம் – 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
எனது எழுத்துப் பயணம் இதுநாள்வரை தொடர்வதற்கு வாசகர்களின் ஆதரவு மிக முக்கியக் காரணம். அவர்களின் அன்பும் ஆதரவுமே, எனது கதைகளுக்கு அழகும், கூடுதல் பலமும் சேர்க்கிறது. வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாசகர்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து நல்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பயணத்தை ‘உன் கரம் பற்றி’ என்ற இப்புத்தகத்தின் மூலம் தொடங்குகிறேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி.

கதையைப் பற்றிய சிறு குறிப்பு:
கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனாவுக்கும், மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த மாதவனுக்கும் சூழ்நிலை காரணமாக திருமணம் நடக்க, அக்கா கீர்த்தனாவை வெறுக்கும் மஞ்சுளா, அவளை பழி வாங்கும் பொருட்டு, கீர்த்தனாவின் எதிரியான வினோத்துடன் கை கோர்க்கிறாள்.
கீர்த்தனா – மாதவன் திருமணம் எதற்காக நடந்தது? கீர்த்தனாவின் எண்ணம் நிறைவேறியதா? மாதவனுடனான அவளுடைய திருமணம் அவளுக்குப் பலம் சேர்த்ததா? என்பதைப் பாசம், காதல், துரோகம், கண்ணீர், பகை என அனைத்தின் கலவையாகச் சொல்லும் அழகான குடும்பக் காதல் கதை, ‘உன் கரம் பற்றி’.

மாசறு நிலவே - Ongoing Novel

வணக்கம் தோழமைகளே !

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 

எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இதோ அடுத்தக் கதையுடன் வந்துவிட்டேன். ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்கிழமைகளில் அத்தியாயம் பதிவு செய்யப்படும். கீழே உள்ள லிங்கில் கதையை படிக்கலாம்.


Read Here

உன் கரம் பற்றி

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில்  உன் கரம் பற்றி என்ற புதிய நாவலை தொடங்கயிருக்கிறேன். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அத்தியாயங்கள் பதியப்படும். கீழ்க்கண்ட லிங்கில் கதையை படிக்கலாம்.

Read Here

தலைப்பு மாற்றம்

 

வணக்கம் தோழமைகளே 

நான் ஒன்று நினைத்து எழுத ஆரம்பித்து இப்பொழுது கதையின் போக்கால் முடிவில் மாற்றம் கொண்டு வரவேண்டியதாகி விட்டது. தேவா, மஹதியின் காதலுக்கு இம்முடிவே நியாயம் சேர்க்கும் என்று நம்புகிறேன். எனவே 'மீண்டும் பூத்தது காதல்' என்ற இக்கதையின் தலைப்பை, 'நின் நினைவுகளே துணையாய்' என்று மாற்றம் செய்துள்ளேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி. 




மீண்டுன் பூத்தது காதல்


Hi there,

Read my Ongoing Novel, 'மீண்டும் பூத்தது காதல்'  from the link below!


Read Here

காதல் கலாட்டா புத்தக வெளியீடு

காதல் கலாட்டா நாவல் புத்தமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் ஆர்டர் செய்யவும்.

BUY NOW
Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook